தமிழகம்

இதுவரை 7.18 லட்சம் பேருக்கு உணவு.. தமிழக அரசு தகவல்!

சென்னையில் விடாது பெய்த கனமழையின் இடையிலும் ஆவின் பால் எவ்வித தடையுமின்றி விற்பனை செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: சென்னை மாநகரில் நேற்று (அக்.15) தொடர்ந்து 131 மி.மீ. அளவிற்கு அதிகமாக மழை பொழிந்ததால், 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும், வருவாய்த் துறையும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமும் உள்ளிட்ட துறைகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணியினை மேற்கொண்டன.

மேலும், கணேசபுர சுரங்கப்பாதையில் தற்போது தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் 20 செ.மீ. மழைபொழிந்தால் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கிய மழைநீர் அகற்றும் சூழ்நிலை இருந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இம்முறை பருவமழையினை எதிர்கொள்ள 1.223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, மழைநீர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கிய 542 இடங்களில், 412 இடங்களில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டு, மீதமுள்ள இடங்களிலும் மழைநீர் அகற்றும் பணி துரிதமாக நடைறுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பருவம் தவறிய மழை பொழிவுக்கு காரணம் இளைஞர்கள்தான்.. மதுரை ஆதீனம் கருத்தால் சலசலப்பு!

இதற்காக சென்னை மாநகராட்சியில் 21,000 களப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி மேற்கொண்டனர். சென்னையில் நேற்று 100 மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

அதேபோன்று பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி அனைத்துப் பகுதிகளுக்கும் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று காலை உணவு 1,000 நபர்களுக்கும், மதிய உணவு 45.250 நபர்களுக்கும், இரவு உணவு 2,71,685 நபர்களுக்கும், இன்று (அக்.16) காலை உணவு 4,16,000 நபர்களுக்கும் என மொத்தம் 7.18,885 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

4 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.