சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பதிவான மழை கடந்த 30 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழைகளில் முதலிடம் எனவும், 72 ஆண்டுகளில் இது மூன்றாவது அதிகபட்ச மழை என என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டிய வளிமண்டலத்தில் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு பகுதியில் நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஓரீரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றத்தில் 13 சென்டிமீட்டர், பெரம்பூரில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 3 தினங்களை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரீரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும் டெல்டா மாவட்டங்கள் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒரீரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு கடற்கரை பகுதிகள், மன்னார்வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது வரை பெய்துள்ள வடகிழக்கு பருவமழை 29 சதவீதம் வழக்கத்தை விட குறைவான மழை பதிவாகும்.சென்னை நுங்கம்பாக்கத்தில் நவம்பர் ஒன்றும் தேதி மட்டும் இதுவரை 72 ஆண்டுகளில் மூன்றாவது மிகப்பெரிய மழை எனவும், கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்ச மழையில் முதலிடம் எனவும் தெரிவித்தார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.