Categories: தமிழகம்

ஒடும் ரயிலில் மதுபோதையில் பெண்ணிடம் தகராறு : வீடியோவை கையில் எடுத்த போலீஸ்… 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம்

ஓடும் ரயிலில் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்த போதை இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் எண். 22639 ஆலப்புழா விரைவு வண்டியில், S-10 பெட்டியில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தினரும் பயணம் செய்து வந்தனர். அப்போது, ரயில் ஈரோடு மற்றும் திருப்பூர் இரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது, அந்த பெட்டியில் பயணம் செய்து வந்த இளைஞர்கள் மதுபோதையில் புகை பிடித்து கொண்டும், சத்தமாக அநாகரீகமாக பேசி கொண்டும் சக இரயில் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் நடந்து கொண்டனர்.

மேலும் படிக்க: அடித்துச் சொல்வேன்…. ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி தான் ; அதிமுகவினருக்கு பட்டியலிட்டு விளக்கிய அண்ணாமலை!!

அதில், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் இடத்தில் ஏன் புகை பிடிக்கிறீர்கள் என கேட்ட மணிகண்டனை அந்த இளைஞர்கள் தரக் குறைவாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், கைகளால் தாக்கிவிட்டு ரயில் திருப்பூர் இரயில் நிலையம் வந்ததும் இறங்கி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இது சம்மந்தமாக மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் மீது திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர்.

அந்த சம்வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய ரயில்வே காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தனலட்சுமி, தலைமையில், உதவி ஆய்வாளர் பாபு, மற்றும் கார்முகில்வானன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆடங்கிய இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் மற்றொருவரை கைது செய்து நீதிமன்றத்தல் ஆஜர்ப்படுத்தி முதல் குற்றவாளியை கோவை சிறையில் அடைத்தனர். இளம் சிறாரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் இன்று 27.05.2024″ம் தேதி அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுடலைராஜ், கரன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரவு நேர இரயில்களில் ரோந்து பணிகளை ரயில்வே காவல் துறையினர் அதிகரித்து வருகின்றன.மேலும் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து ஆய்வாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.இரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24×7 ரயில்வே காவல் உதவி மைய எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500 ஐ தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தங்க மோதிரம்…சென்னைக்கு படையெடுத்த மதுரை ரசிகர்கள்.!

உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…

5 minutes ago

மூத்த நடிகைகள் தான் வேணும்… அடம் பிடிக்கும் இளம் நடிகர் : கதறும் தயாரிப்பாளர்கள்!

பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…

34 minutes ago

‘STR 50’ கைவிடப்பட்டதா…இயக்குனர் தேசிங் பெரியசாமி சொல்லுவது என்ன.!

யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…

37 minutes ago

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…

1 hour ago

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

2 hours ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

2 hours ago

This website uses cookies.