சென்னை : பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா நகரில் இயங்கி வரக்கூடிய மோட்டார் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி வருபவர் ராஜா (42). அதே நிறுவனத்தில் வரவேற்பாளராக (24) பெண் ஒருவர் கடந்த ஒரு மாதமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இளம்பெண் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அப்போது, ராஜா திடீரென இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு, பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்த இளம்பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல்துறையிடம் இரண்டு நாட்கள் கழித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அயனாவரத்தை சேர்ந்த மேனேஜர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.