தமிழகம்

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது,அதிலும் குறிப்பாக CSK,MI,RCB அணிகள் ஆட்டத்தை பார்க்க தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதையும் படியுங்க: மோசமான விபத்து..நொறுங்கிய கார்..உயிருக்கு போராடும் பிரபல பாலிவுட் நடிகரின் மனைவி.!

அந்த வகையில் வரும் 28ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது.

தொடங்கிய சில மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதால், டிக்கெட் வாங்க முடியாமல் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறும்போது,ஆன்லைன் மூலமாக டிக்கெட் வாங்குவது கடினமாக இருப்பதாகவும்,கூடுதல் கட்டணத்துடன் டிக்கெட்டுகள் பிளாக் மார்க்கெட்டில் விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

சென்னையில் குறைந்தபட்சமாக 1,700 முதல் 15,000 வரை அதிகாரப்பூர்வ விற்பனை நடைபெற்றது,ஆனால் பிளாக்கில் சில பேர் 50,000 முதல் 1,00,000 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை அதிகமாக இருந்தாலும் சில தீவிர ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்,இந்த வாய்ப்பை பயன்படுத்தி சில மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதாவது சமூகவலைத்தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் “ என்னிடம் டிக்கெட்உள்ளது,உடனே DM பண்ணுங்க ” என விளம்பரம் செய்து,ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இதனை நம்பி ரசிகர்களும் நம்பிக்கையுடன் பணம் அனுப்பிய பிறகு,அவர்கள் தொடர்பு கொள்ளும் எண்கள் செயலிழக்கின்றன.இது குறித்து போலீசாரிடம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில்,ரசிகர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Mariselvan

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

7 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

8 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

8 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

10 hours ago

மோசமான விபத்து..நொறுங்கிய கார்..உயிருக்கு போராடும் பிரபல பாலிவுட் நடிகரின் மனைவி.!

சம்பவ இடத்திற்கு விரைந்த சோனு சூட் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சூட் மும்பை-நாக்பூர் சாலையில்…

11 hours ago

This website uses cookies.