கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்ட விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட ஓட்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 16ம் தேதி ஷவர்மா எனும் சிக்கன் உணவை சாப்பிட்ட 14 வயது மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாஸ்ட்புட், ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் எதிரில் செயல்பட்டு வரும் சக்தி பாஸ்ட் புட் கடையில், குருபரப்பள்ளி சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைசாலையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டனர்.
அப்போது, 26 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் மற்றும் அலுவலர்கள் சக்தி பாஸ்ட் புட் கடைக்கு சீல வைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் அந்த கடை தற்போது வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பாதுகாப்புதுறை அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், கிருஷ்ணகிரி சக்தி பாஸ்ட்புட் கடைக்கு நகராட்சி கமிஷனர் ‘சீல்’ வைத்துள்ளார். தற்போது கடை திறந்த விவரம் குறித்து முழுமையாக தெரியவில்லை. அந்த கடை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உணவு மாதிரிகள் சேகரிக்கப்படும்,” என்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.