கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்ட விவகாரத்தில் சீல் வைக்கப்பட்ட ஓட்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 16ம் தேதி ஷவர்மா எனும் சிக்கன் உணவை சாப்பிட்ட 14 வயது மாணவி உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் பாஸ்ட்புட், ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் எதிரில் செயல்பட்டு வரும் சக்தி பாஸ்ட் புட் கடையில், குருபரப்பள்ளி சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் தொலைசாலையின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டனர்.
அப்போது, 26 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் வசந்தி, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் மற்றும் அலுவலர்கள் சக்தி பாஸ்ட் புட் கடைக்கு சீல வைத்தனர்.
இந்நிலையில், மீண்டும் அந்த கடை தற்போது வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பாதுகாப்புதுறை அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், கிருஷ்ணகிரி சக்தி பாஸ்ட்புட் கடைக்கு நகராட்சி கமிஷனர் ‘சீல்’ வைத்துள்ளார். தற்போது கடை திறந்த விவரம் குறித்து முழுமையாக தெரியவில்லை. அந்த கடை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உணவு மாதிரிகள் சேகரிக்கப்படும்,” என்றார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.