தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின், மிகப்பெரும் கருத்தரங்கு நந்தம்பாக்கத்தில் ஏப்ரல் 9 மற்றும் 10ம் ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் இயக்குநர் ராஜமெளலி, மணிரத்னம், ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
மாநாட்டை துவங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘நானும் திரைப்படத்தில் சிறு வேடங்களில் நடித்துள்ளேன். திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன் என தெரிவித்தார்.
திமுகவையும் திரைத்துறையையும் பிரிக்க முடியாது என்றார். 2 ஆண்டுகாலம் கொரோனாவால் பல்வேறு துறையினர் பாதிப்படைந்தனர். அதில் திரையுலகம் பெருமளவில் பாதிப்புக்குள்ளானது. லட்சக்கணக்கான மக்கள் திரைத்துறையை நம்பி உள்ளனர். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகும். திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு என பேசினார்.
திரைத்துறையாக இருந்தாலும் செய்தித்துறையாக இருந்தாலும் தமிழ்நாடு மிக நீண்ட வரலாறு கொண்டதாகும். திரைப்படம் தொடங்கும் முன்பு கஞ்சா, குட்கா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக் கூடாது என்பது போல கஞ்சா ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.