விழுப்புரம் அருகே பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் (வயது 35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் தனது பைக்கில் விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரை மிளகாய் பொடி தூவி கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்க்கு விரைந்து வந்த டிஎஸ்பி சுரேஷ் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 2 நாட்களாகவே அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் சண்டைபோட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
ரவுடிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் வேண்டுமெனறே வரவழைத்து கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது தொழில் போட்டி காரணமாக நடைபெற்றதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாலும், பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
"சென்னை 28" மூன்றாம் பாகம் வருகிறதா? கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு,தன்னுடைய திரைப்பயணத்தை நடிகராக தொடங்கினார்.உன்னை சரணடைந்தேன்,ஏப்ரல் மாதத்தில்,சிவகாசி உள்ளிட்ட…
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி,ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர்…
இந்திய அணியின் மறக்க முடியாத தோல்வி! கடந்த 2000 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா…
பாஜக - அதிமுக கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு எந்த ஒரு கேள்வியையும் கேட்க வேண்டாம் என தமிழிசை செளந்தரராஜன்…
பட வாய்ப்புக்காக அலையும் காக்கா முட்டை ரமேஷ் தமிழ் சினிமாவில் 2015-ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ‘காக்கா…
திருவாரூர் அருகே காதல் திருமணம் செய்த மனைவியைக் கொலை செய்து விட்ட தப்பி ஓடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.…
This website uses cookies.