விழுப்புரம் அருகே பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் (வயது 35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் தனது பைக்கில் விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரை மிளகாய் பொடி தூவி கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்க்கு விரைந்து வந்த டிஎஸ்பி சுரேஷ் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 2 நாட்களாகவே அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் சண்டைபோட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
ரவுடிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் வேண்டுமெனறே வரவழைத்து கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது தொழில் போட்டி காரணமாக நடைபெற்றதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாலும், பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.