Categories: தமிழகம்

கலீம் உடன் கைக்கோர்த்த சின்னத்தம்பி : குட்டை கொம்பனை விரட்ட களமிறங்கிய கும்கி யானைகள்… வனத்துறையினர் அதிரடி!!

ஒற்றை யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளது முப்பதுக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டுயானை இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு கன்னிவாடி வன சரகத்திற்க்கு உற்பட்ட பன்றிமலை, அழகுமலை, தேனிமலை, கோம்பை, பண்ணைபட்டி ஒரு பட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

யானைகள் தாக்குவதால் விவசாயிகள் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைகொம்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதி விவசாய நிலங்கள் சாலைகளில் வலம் வந்து விடுகிறது.

அதேபோல் பொதுமக்களை துரத்துவதும் வீடுகளை தாக்குவதும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் தனிமையிலிருந்து தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகே யானை வந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தோனிமலை கீழ்மலை பகுதியான கோம்பை, நாய்ஓடைப் பகுதியிலும் தொடர்ந்து சுற்றிவருகிறது இறங்கி யானையை பிடிக்கும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவனைப் பிடிப்பதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 57 வயதுடைய கலீம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டது. அதேபோல் கோவை தடாகம் பகுதியின் சூப்பர்ஸ்டாராக விளங்கிய சின்னத்தம்பி யானை நேற்று கொண்டு வரப்பட்டது.

மனிதர்களை, விலங்குகளை தாக்காமல் குடியிருப்பு பகுதிகளை நோக்கி பயணித்த சின்னத்தம்பி யானை சமீபத்தில் தான் வனத்துறையால் பிடிக்கப்பட்டு, தற்போது கும்கியானையாக களமிறங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒற்றை யானை எங்கு உள்ளது என்பது குறித்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். யானை பகல் நேரத்தில் உறங்குவதற்காக ஒரு சில இடத்தை தேர்வு செய்யும் அந்த இடத்தை கண்டறிந்த உடன் உடனடியாக கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்படும்.

மேலும் சமநிலையில் இல்லாத பகுதியாக உள்ளது. அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலைமேல் பகுதியாகும் ஆகவே முக்கிய வேலையை எவ்வாறு கொண்டு செல்வது கன்னிவாடி பண்ணைபட்டி அருகே உள்ள கோம்பை வனப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுயானை இருக்குமிடம் தெரிந்தவுடன் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு கும்கி யானைகளும் அழைத்துச் செல்லப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

14 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

16 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

16 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

16 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

17 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

18 hours ago

This website uses cookies.