சேலத்தில் சினிமா திரையரங்கில் போலி டிக்கெட்டுகள் அச்சடித்து விற்பனை செய்து, பணமோசடியில் ஈடுபட்ட திரையரங்க மேலாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல சினிமா தியேட்டர் பங்குதாரர் கீதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரியை சந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்று கொடுத்தார். அதில் தியேட்டரில் பணியாற்றிய மேலாளர் கண்ணன் உள்பட சிலர் ஒன்றாக சேர்ந்து தியேட்டரில் ‘ஹவுஸ்புல்” ஆகாத நாட்களில், ஏற்கனவே விற்பனையான டிக்கெட்டுகளை அதே எண்ணுடன் பொய்யாக மறு டிக்கெட்டுகள் அச்சடித்துள்ளனர்.
பின்னர் மறுஅச்சடிப்பு செய்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடாக கணக்கு எழுதி அவர்களுடைய சொந்த உபயோகத்திற்கு எடுத்து கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை டிக்கெட்டுகள் மூலம் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்து உள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு,மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சினிமா தியேட்டர் மேலாளர் கண்ணன் (வயது 39), புக்கிங் ஆபரேட்டர்கள் வெங்கடாசலம் (32), முருகன் (33), ஏழுமலை (26) ஆகியோர் இரண்டு பெண்கள் மற்றும் மொத்தம் 7 பேர் டிக்கெட்டுகளை மறு பிரிண்டு செய்து விற்று ரூ.96 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.