கோவை கணபதி மணியகாரம்பாளையம் 19 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு அலங்கார வளைவுகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் கொடி போன்றவற்றை வார்டு செயலாளர் குமார் தலைமையில் அமைக்கப்பட்டு வந்த நிலையில் எந்த வித ஏற்பாடுகளும் மற்றும் கொடிகளும் கட்டக் கூடாது என்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவரும் மாவட்ட தி.மு.க பிரதிநிதியுமான ஆனந்தகுமார் வார்டு செயலாளர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் கோவை மாநகராட்சி 30வது வார்டு உறுப்பினர் மேயரின் சகோதரியுமான சரண்யாவின் கணவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு 10 மேற்பட்ட அடியாட்களுடன் வந்து அங்கு இருந்தவர்களிடம் தகராறு செய்து கண் மூடி தனமாக தாக்கத் தொடங்கினார்.
இதில் பால்ராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த சரவணம்பட்டி காவல் துறையினர் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் மணிகாரம் பாளையத்தில் காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.