Categories: தமிழகம்

சுவரில் விளம்பரம் எழுதுவதில் தகராறு…பாஜகவினர் சட்டையை பிடித்து தாக்கிய திமுகவினர்?: போராட்டம் நடத்தப்போவதாக பாஜக அறிவிப்பு..!!

கரூர்: கரூரில் அதிகரிக்கும் குட்கா, கஞ்சா ஆகியவைகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதையும், அதை தடுக்காத காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தினையும் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் சர்ச் கார்னர் அருகில் உள்ள கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுவற்றில் சுவர் விளம்பரம் எழுதுவது சம்பந்தமாக பாஜக, திமுக வினரிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், திமுக வினர் எப்போதும் போல, தாக்குதலில் ஈடுபட்டதால் பாஜக நிர்வாகிகள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், திமுக வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் செல்வன் தலைமையில், அதே பகுதியில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்ட சாலைமறியல் நடைபெற்றது.

இந்நிலையில் கலவரபூமியாக காணப்பட்ட இடத்திற்கு நேரில் வந்த பாஜக கரூர் மாவட்ட தலைவர் அண்ணாமலை, கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கரூர் மாவட்டத்தில், 1 நெம்பர் லாட்டரி விற்பனை, கஞ்சா, குட்கா ஆகியவை விற்பனை தலை விரித்தாடுவதோடு, 24 மணி நேரமும் மதுக்கள் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றது என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், திமுகவினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டதோடு எங்கள் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க செல்வதாக கூறி ஆர்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை கரூர் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றார்.

இந்நிலையில் பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் நாதன், திமுக நகர செயலாளர் கனகராஜ் மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எங்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகளை தாக்கியுள்ளனர் என்றும், ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் கண்முன்னரே ரெளடியிசம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், எங்கள் சாலைமறியல் மற்றும் ஆர்பாட்டத்தினை கட்டுப்படுத்தி அனுப்பும் வேலையை மட்டுமே காவல்துறையினர் செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையிலேயோ அல்லது அவரின் உத்தரவு பெற்றோ கரூரில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்

UpdateNews360 Rajesh

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

2 days ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

2 days ago

This website uses cookies.