பக்தருக்கும், பாதுகாவலாளிக்கும் இடையே அடிதடி : பழனி மலை கோவிலில் பரபரப்பு!!!
பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கிருத்திகை, பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமானூர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
இன்று கிருத்திகை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் பலரும் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். மலை மீது இரவு 9:30 மணிக்கு ராக்கால பூஜை முடிந்து கோயில் நடை அடைக்கப்படும்.
இரவு ஒன்பது மணி வரை பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு கோயில் பாதுகாவலர்கள் அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்து 9 மணிக்கு மேலாக மலையடிவாரத்தில் உள்ள படிப்பாதையில் கதவுகள் அடைக்கப்பட்ட பின்னர் மலை மீது செல்ல முயற்சி செய்துள்ளார்.
பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்களிடம் மலை மீது செல்ல அனுமதிக்க கோரி வாக்குவாதம் செய்து பின்னர் அடிதடி ஏற்பட்டுள்ளது. பக்தரும் கோயில் பாதுகாவலர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர்.
பின்னர் கோயில் பாதுகாவலர்கள் பக்தரை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயற்சி செய்துள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் பக்தரும் கோயில் பாதுகாவலர்களும் அடித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.