திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தினகரன் தலைமையில் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனாங்கூர் மற்றும் பில்லூர் கிராமங்களில் இந்த பிரச்சாரக் கூட்டமானது நேற்று மாலை 6 மணிக்கு ஆனாங்கூர் மந்தகரை திடல் பகுதியிலும் மற்றும் 7 மணிக்கு பில்லூர் மார்க்கெட் வீதியிலும் நடைபெற திட்டமிடபட்டது.
பில்லூரில் நடைபெற இருந்த சாதனை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் செந்தூர் பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரை ஆற்ற வருகை புரிந்த நிலையில் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மற்றும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ஆதரவாளர்கள் கூட்டத்தின் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்களில் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெறாததால் நிகழ்ச்சி அமைப்பாளரான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தினால் கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் அரை மணி நேரம் நடைபெற இருந்த நிலையில் 5 நிமிடத்தில் முடிவு பெற்றது. ஏற்கனவே விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
This website uses cookies.