Categories: தமிழகம்

தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்.. இரு குழுக்களாக பிரிந்து கல்வீசித் தாக்குதல் : போலீஸ் குவிப்பால் பதற்றம்!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது தனியார் கலை அறிவியல் கல்லூரி இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் பைக் நிறுத்துவதில் இரு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்பு இரு மாணவர்களும் அங்கு சமாதானம் ஆனதாகவும் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் மாலையில் கல்லூரி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர். கல்லூரியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அய்யலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது.

இந்த அய்யலூர் பேருந்து நிறுத்தம் வரை மாணவர்களுக்கிடையே தகராறு நடைபெற்று கொண்டே வந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

இந்த தாக்குதலில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த வடமதுரை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி பிரச்சனையில் ஈடுபட்டவர்களை விசாரணைக்காக வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவர்களுக்கிடையே நடந்த இந்த மோதல் அய்யலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

6 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

7 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

8 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

8 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

9 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

10 hours ago

This website uses cookies.