தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே மது அருந்துவதில் இரு வேறு சமூகத்தினருடைய ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்களை கட்டி வைத்து தாக்குதலில் ஈடுபட்ட நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் மகன் வேலன் (வயது18) அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீகாந்த் (வயது 25) ஆகிய இருவரும் போதக்காடு சாலையில் அமர்ந்து மது அருந்தியதாகவும் அவ்வழியாகச் சென்ற இளைஞரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் வேலன் என்பவர் அந்த இளைஞரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்தவர் அருகே உள்ள போதகாட்டிற்கு சென்று தன்னை அப்பகுதிச் சார்ந்த இளைஞர்கள் அடித்து விட்டார்கள் என்று கூறி மினி டெம்போ மூலம் 30 மேற்பட்ட கும்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் கயிற்றால் கட்டி சரமாரியாக தாக்கி அவ்வாகனத்தில் தூக்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த வேலன் மற்றும் ஸ்ரீகாந்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவத்தால் பயர்நத்தம் கிராமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இது குறித்து பொம்மிடி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் விசாரணை செய்து போதகாடு பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் ரவிச்சந்திரன் வயது 34 கோவிந்தன் மகன் மாதையன் வயது 28 அன்பு மகன் அரவிந்த் வயது 25 ஆகியோர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் பொம்மிடி காவல் நிலைய வளாகத்தில் இரு வேறு சமூகத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.