Categories: தமிழகம்

மது அருந்துவதில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல்… இளைஞர்களை கட்டி வைத்து அடித்த கொடூரம்!!

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே மது அருந்துவதில் இரு வேறு சமூகத்தினருடைய ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்களை கட்டி வைத்து தாக்குதலில் ஈடுபட்ட நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் மகன் வேலன் (வயது18) அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீகாந்த் (வயது 25) ஆகிய இருவரும் போதக்காடு சாலையில் அமர்ந்து மது அருந்தியதாகவும் அவ்வழியாகச் சென்ற இளைஞரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் வேலன் என்பவர் அந்த இளைஞரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்தவர் அருகே உள்ள போதகாட்டிற்கு சென்று தன்னை அப்பகுதிச் சார்ந்த இளைஞர்கள் அடித்து விட்டார்கள் என்று கூறி மினி டெம்போ மூலம் 30 மேற்பட்ட கும்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் கயிற்றால் கட்டி சரமாரியாக தாக்கி அவ்வாகனத்தில் தூக்கிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த வேலன் மற்றும் ஸ்ரீகாந்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவத்தால் பயர்நத்தம் கிராமத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இது குறித்து பொம்மிடி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் விசாரணை செய்து போதகாடு பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் ரவிச்சந்திரன் வயது 34 கோவிந்தன் மகன் மாதையன் வயது 28 அன்பு மகன் அரவிந்த் வயது 25 ஆகியோர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் பொம்மிடி காவல் நிலைய வளாகத்தில் இரு வேறு சமூகத்தினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஊரையே காலி செய்கிறேன்.. திடீரென புறப்பட்ட பிரபலம்.. என்ன காரணம்?

பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…

32 minutes ago

நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!

உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…

12 hours ago

‘பேட் கேர்ள்’ டீசர் விவகாரம்…கூகுளுக்கு பறந்த நோட்டீஸ்..நீதிமன்றம் கெடுபிடி.!

படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…

12 hours ago

ரஜினியை சந்தித்த பிரபல தயாரிப்பு நிறுவனம்…படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்.!

ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…

14 hours ago

சாய் அபயங்கருக்கு அடிச்சது ஜாக்பாட்.. முன்னணி நடிகருடன் இணைகிறார்!

பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…

14 hours ago

சிவாஜியின் வீடு பிரபுக்கு சொந்தம்…ஜப்தி உத்தரவை எதிர்த்து ராம்குமார் மனு.!

வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…

14 hours ago

This website uses cookies.