கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொய்யாமணி கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. அதற்காக அந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
அந்த பேனரை நேற்று மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பேனரை கிழித்ததால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட போது, அப்பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினர் .
அதனைத் தொடர்ந்து இன்று காலை ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் அவ்வழியே சென்றபோது, மற்றொரு சமுதாயத்தினர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதனால் இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி தலைமையிலான 50 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்களை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு சமுதாயத்தினர் சாலை மறியல் செய்தனர்.
அதனை எடுத்து குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் சாலை மறியல் செய்தவர்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது
15 க்கு மேற்பட்டோர் நபர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.