திண்டுக்கல் மாவட்டம் பழனி திருக்கோவிலுக்கு சொந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பழனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லுரி செயல்பட்டு வருகிறது.
இதனை ஒட்டியே அருள்மிகு பழனியாண்டவர் தொழில்நுட்பக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் இன்று 57ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் சிலர் இன்று கல்லூரி அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு தேநீர் அருந்திக்கெண்டிருந்த பழனியாண்டவர் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருதரப்பு மாணவர்களும் கல்வீச்சு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டு கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மோகன் மற்றும் கவின் ஆகிய இரு மாணவர்களுக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் மாணவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். காயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் இரு கல்லூரிகளிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.