திண்டுக்கல் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக 70 அடி உயர செல்போன் டவர் மீது ஏறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேற்று தேனி வருகை தந்தார் இன்று காலை தேனியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி விட்டு அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையான பரசுராமபுரம் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பல்வேறு இடங்களில் திமுக கட்சியினர் தமிழக முதல்வரை வரவேற்க சாலையோரங்களில் ஆங்காங்கே திமுக கட்சியினர் பொதுமக்களுடன் வெயிலில் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து தமிழக முதல்வரை பார்ப்பதற்காக வத்தலகுண்டு அருகே உள்ள கட்டக்காமன்பட்டி பகுதியில் 80 அடி உயரம் உள்ள செல்போன் டவர் மீது விராலிபட்டி பகுதியைச் சேர்ந்த குருசங்கர் என்ற இளைஞர் ஏறியுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 80 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறினார். இதையடுத்து பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இளைஞர் கீழே வராததால் பொதுமக்கள் அவரை கீழே இறங்க வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் வருகையால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இளைஞர் செல்போன் டவர் மீது ஏறியுள்ளது அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.