Categories: தமிழகம்

கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடல்.. கோவை மாநகராட்சி மீது அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்!!

கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடல்.. கோவை மாநகராட்சி மீது அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்!!

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.

இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில் இங்குள்ள விலங்குகள் பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கோவையின் அடையளமாக விளங்கிய வ.உ.சி உயிரியல் பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும் என கோவை மாநகராட்சி மேயரை வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள், கோவை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்க கடந்த 2 வருடத்திற்கு முன் திமுக அரசு அறிவித்திருந்தது.

சிறைச்சாலைககு சொந்தமான இடத்தில் இப்பூங்காவை அமைக்க அவசர கூட்டம் போட்டு அவசரத் தீர்மானம் இன்று நடைபெற்றது. கட்டிடமே கட்டக்கூடாது என கோர்ட் உத்தரவு உள்ள போதும், பூங்கா என சொல்லிவிட்டு தற்போது கூட்டரங்கு கட்டுவது எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வ.உ.சி பூங்கா, மாநகராட்சி கலையரங்கம் என ஏராளமான மாநரகாட்சிக்கு சொந்தமான இடம் இருக்கும் போது கூட்டரங்கு கட்டுவதற்காக 200 கோடி ரூபாய் போட்டு கட்ட வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர்.

1963ல் சென்னைக்கு பிறகு கோவையில்தான் வஉசி உயிரியல் பூங்கா இருந்தது. தற்போது அது மூடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை கோவை மாநகராட்சி எடுக்கவில்லை, மக்கள் மீது அக்கறையில்லாத ஒரு மேயர், கோவை வளர்ச்சி மீது அக்கறை இல்லை என மேயர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு? அதிரடி அறிவிப்பால் சோகத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…

9 minutes ago

உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!

BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…

25 minutes ago

சிறுமலை அருகே ஆண் சடலம்.. சம்பவ இடத்தில் NIA.. திண்டுக்கல்லில் நடப்பது என்ன?

திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…

43 minutes ago

மகனாக வளர்ந்த தம்பி.. சைகை மொழியால் கொடுமையைச் சொன்ன அக்கா.. வேலூரில் பரபரப்பு!

வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…

2 hours ago

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

3 hours ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

3 hours ago

This website uses cookies.