Categories: தமிழகம்

சட்டமன்றத்தில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கார் CM.. இளம்விதவைகள் அதிகம் என கூறிய கனிமொழி எங்கே? ஹெச்.ராஜா காட்டம்!

வேலூரில் பாஜக கட்சித் தொண்டர்களை சந்திக்க வந்த எச். ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்து உள்ளனர். இது பற்றி ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல் சட்டமன்றத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் ஒளிந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கூட அனுமதிக்காமல் அவர்களின் குரல் வலையை நெறிப்பது போல் சபாநாயகர் நடந்து கொண்டது ஜனநாயக மரபுக்கு எதிரானது.

சட்டமன்றம் முதல் நாளில் முதல்வர் ஸ்டாலின் நான் எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை என்று சொன்னதற்கு எச். ராஜா எதிர்க்கட்சிகள் யாரும் இல்லாமல் சட்டமன்றத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த சமயத்தில் வயிற்று வலியாகம் , வலிப்பு வந்து இறந்து போனதாக தகவல் வெளியிட்டு மறைக்கும் நோக்கத்தில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டார்

முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் முத்துசாமி சொல்லாமல் கலெக்டர் இது போன்ற தகவலை சொல்லி இருக்க மாட்டார் என்றும் எச். ராஜா தெரிவித்தார்.

அதனால் தான் நான் இந்த வழக்கை சிபிஐ ஒப்படைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார்.

மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் ஸ்டாலினுக்கு பயம்,கள்ள சாராயம் காய்ச்சுவர் வீட்டில் ரெய்டு நடத்தும் போது,ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு என்ற ஸ்டிக்கர் கள்ள சாராயம் காய்ச்சுவர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது

கள்ள சாராயம் காய்ச்சுபருக்கெல்லாம் விடியல் தரப் போறார் என்றுதானே அது அதற்கு அர்த்தம் எனவே இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க குற்றவாளி இந்த அரசாங்கமே தான் என்று எச். ராஜா தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மாநில அரசாங்கத்திற்கு மிக மோசமான அடிமைகளாக நடந்து கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பெண் போலீசை தவறாக பேசியது தவறுதான் சவுக்கு சங்கர் மீது எடுத்த நடவடிக்கை சரி அவர் மீது குண்டர் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் மாண்புமிகு நிதி அமைச்சர் பற்றி இனியவன் என்கின்ற ஒரு youtube சேனலில் பேசுனதற்கு புகார் கொடுத்ததற்கு டிஜிபி என்ன செய்தார்.

விஷ சாராய அரசு என்று விமர்சனம் செய்தார். காவல்துறை உங்களை நீதிமன்றத்திற்கு இருக்கும்படி வைத்துக் கொள்ளாதீர்கள்

ஏனென்றால் பிஜேபி சார்பாக புகார் கொடுத்துள்ளோம் நிதியமைச்சர் பற்றி அவதூறாக பேசியுள்ளார். திமுக அல்லது திக காரன் என்றால் அவதூறாக பேசினால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா.

சவுக்கு சங்கர் மீது குண்டர் வழக்கு போட்டார் அல்லவா டிஜிபி ஆனால் மாண்புமிகு நிதி அமைச்சர் பத்தி அவதூறாக பேசியதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

ஆகவே இந்த அரசாங்கம் மிக மோசமாக ஆளுங்கட்சிக்கு கைக்கூலியாகவும் அடிமைகளாகவும் செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிப்பதாக எச் ராஜா தெரிவித்தார்.

கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்ததற்கு சமூக வலைதளங்களில் பல பேர் அதனை கிண்டல் செய்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு

எச் ராஜா உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை. நிற்கதையாக போன குடும்பத்திற்குத் தான் நிவாரணம் கொடுத்ததாக தெரிவித்தார்.

தூத்துக்குடி எம்பி ஆக இருக்கும் கனிமொழி 2014 என்ன சொன்னார்கள் என்றால் இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ளது தமிழ்நாட்டில் தான்
அதை இப்போது அவர் கழுத்தில் எழுதிப் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆங்கில நாளிதழில் ஒரு சர்வே சொல்லுகிறது 495 விதைவைகளில் 188 பேர் கள்ளசாராயம் குடித்து கணவனை இழந்தோம் என்று சொல்லி இருக்கிறார்கள்

ஆகவே அவர்கள் விதவை ஆனதற்கு காரணம் ஸ்டாலின் கருணாநிதி அவர்கள் குடும்பம் தான். தமிழனை முதலில் குடிக்க வைத்து குடியை கெடுத்தது கருணாநிதி தான். கள்ள சாராயம் குடித்து உயிரிழந்ததற்கு இந்தப் பாவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் கருணாநிதி.

முதலில் முதல்வர் பொறுப்புள்ள மனிதராக நடந்து கொள்ள வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக வின் வாக்கு எண்ணிக்கை ஆறு சதவீதம் குறைந்துள்ளது.

இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாக எனவே பாஜகவின் வளர்ச்சி தெளிவாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

5 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

6 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

6 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.