கள்ளக்குறிச்சி : கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணிசெய்ய விடாமல் தடுத்து, கூட்டுறவு கடன் சங்கத் தலைவரின் கணவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மிரட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த கழுமரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக அதிமுகவை சேர்ந்த சகுந்தலா செயல்பட்டு வருகிறார்.
ஆனால், இவர் டம்மிதான். இவருடைய கணவர் தங்கையா தான் ஆக்டிங் தலைவராக இருந்து வருகிறார். இவர், கூட்டுறவு கடன் சங்க செயலாளர் லட்சுமி நாராயணனை, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சி செய்தும் முடியவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த ஆக்டிங் தலைவராக செயல்பட்டு வரும் தங்கையா, கூட்டுறவு கடன் சங்கத்தின் முக்கியப் பணிகள் மற்றும் பொறுப்புகளை சாதாரண ஊழியரான விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
தங்கையாவின் இந்தத் தரமற்ற செயல், மற்ற ஊழியர்களை கவலை அடையச் செய்துள்ளது. மேலும், தங்கையாவின் இந்த அத்துமீறலை செயலாளர் லக்ஷ்மி நாராயணன் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது, ஆக்டிங் அதிமுக தலைவராக செயல்பட்டு வரும் தங்கையா தனது ஆதரவாளர்களோடு வந்து, செயலாளர் மற்றும் சில ஊழியர்களிடம் அத்துமீறி நடந்து, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்னை எதிர்த்து யாரும் பேசக்கூடாது, பேசாமல் உட்காருங்கள் என்று கையை உயர்த்தி, கடுமையாக மிரட்டி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
This website uses cookies.