கோவை : தமிழக மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது, ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி கூறும் போது : முதல்வர் ஆணைக்கு இணங்க, பொதுமக்கள் தாகம் தீர்க்க பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மோர் பந்தல்களில் இளநீர், தர்பூசணி ஆகியவையும் கொடுக்கப்படுகிறது. கோவையை பொருத்தவரை முதல்வர் வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக நிதிகளை வழங்கி வருகிறார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் ஆய்வு செய்து சிறப்பு திட்டங்களை வழங்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டம் ஏதும் கொண்டுவரப்படவில்லை, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் ஆய்வு செய்து பணிகளை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நமது மின் தேவை 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 ஆயிரம் டன் நிலக்கரி தருகிறது.
முதல்வர் வழிகாட்டுதல் படி, 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு மின் தேவைக்காக வெளிச்சந்தையில் மின்சாரத்தையும் வாங்கி வருகின்றோம். அடுத்த ஆண்டு அனைத்து மின்சார தேவைகளும் பூர்த்தி செய்யும் அளவிற்கு சிறப்பான பணிகளை மேற்கொள்ள வருகிறோம்.
மேம்பாலப் பணிகள் குறித்த கேள்விக்கு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர்களை அழைத்து பேசி தீர்வு காணப்பட்டு மேம்பால பணிகள் தொடரும் எனவும், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை நிதி ஆதாரம் பெறப்பட்டு பின்னர் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் மேலும் குடிநீரைப் பொருத்தவரை கிடப்பில் போடப்பட்டுள்ள ஆய்வுகளை முன்னெடுத்து குடிநீர் சரிசெய்யப்படும் இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.