தமிழகம்

கடனைத் திருப்பிக் கேட்டவருக்கு புதுவித டீல்.. வீட்டுக்குள் சென்றதும் ஷாக்.. கோவையில் நடந்தது என்ன?

கோவையில் கடனைத் திருப்பிக் கேட்டவருக்கு பெண்களை வைத்து ஆசையைத் தூண்டிய நபர் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் (35). இவர் நெல்லையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அந்த வகையில், கோவை மாவட்டம், பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் ரோட்டைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கு தொழில் நிமித்தமாக லட்சுமணன் கடன் கொடுத்து உள்ளார்.

இந்த நிலையில், கொடுத்த பணத்தை லட்சுமணன் திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு, கோவைக்கு நேரில் வந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு சூர்யா கூறிஉள்ளார். எனவே, கொடுத்த கடனை வாங்குவதற்காக, லட்சுமணன் நெல்லையில் இருந்து கோவைக்கு வந்து உள்ளார். பின்னர், ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகே வந்துவிட்டு, சூர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.

இதன்படி அங்கு வந்த சூர்யா லட்சுமணனை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அந்த வீட்டில் இரண்டு பெண்கள் இருந்து உள்ளனர். பின்னர், அந்தப் பெண்களைக் காட்டி லட்சுமணனுக்கு சபல ஆசையைத் தூண்டி உள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட லட்சுமணன், அங்கு இருந்து உடனடியாக தப்பி ஓடி உள்ளார்.

இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் அருகே அழுகிய நிலையில் சடலம்.. சொகுசு காரில் நடந்தது என்ன?

பின்னர் உடனடியாக இது குறித்து கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால், போலீஸ் வருவதை முன்கூட்டியே அறிந்த சூர்யா மற்றும் அவரது பங்குதாரர் ஜெபின் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த 2 பெண்களையும் மீட்ட போலீசார், தப்பி ஓடிய சூர்யா மற்றும் ஜெபின் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

15 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

15 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

17 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

17 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

17 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

18 hours ago

This website uses cookies.