கோவையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்த நிலையில் மாலை தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையை கரையை கடந்தது.
இதனைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. தொடா் மழையால் கோவையில் குளிரின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை பெய்த மழையால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லுவோர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் கோவையில் காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.
இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் தற்போது வரை தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டவுன்ஹால் உக்கடம், காந்திபுரம், வடவள்ளி, சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம் போன்ற மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது.
இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று அதிகாலை முதலே மிதமான மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.