கோவை : கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், ரூ.8.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து முதன்மை உதவியாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பால் கம்பெனி நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு வழங்கப்படும் அரியர் பணம் வழங்க உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில், நேற்று மாலை 6.30 மணியளவில் லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர் பரிமளா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின் போது கோவை ஆவின் நிறுவனத்தின் முதன்மை உதவியாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது காரில் ரூ.5.90 லட்சம் மற்றும் அவரது அலமாரியில் இருந்து ரூ.2.50 லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணம் கொடுத்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.