தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த கோவை மாவட்டத்தில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் விளைவாக கோவை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இன்று தொடங்கிய முதல் விமான சேவையில் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் 163 பயணிகள் கோவைக்கு வந்தடைந்தனர்.
காலை 6.40 மணிக்கு வந்து சேர்ந்த விமானம், 7.30 மணிக்கு மீண்டும் கோவையில் இருந்து அபுதாபிக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணம் செய்தனர்.இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை வாரத்திற்கு 3 நாட்கள் என்ற அடிப்படையில் விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், வளர்ந்து வரும் கோவை நகரில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவை இயக்கப்பட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கோவை கூடுதல் வளர்ச்சியை பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.