சென்னை : கோவையில் சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்பனை செய்து, அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் நூதன முறையில் பிரச்சாரம் செய்தது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்பாளர்கள் அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு அதிமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் ஷர்மிளா சந்திர சேகர். தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், கணவருமான சந்திரசேகர் மற்றும் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், 38வது வார்டுக்குட்பட்ட ஓணாம்பாளையம் பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சாலையோர வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். அவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடிய ஷர்மிளா சந்திரசேகர், காய்கறி கடைக்கு வந்த பொதுமக்களுக்கும், காய்கறிகளை விற்பனை செய்து ஆதரவு திரட்டினார்.
அதிமுக வேட்பாளரின் இந்த நூதன பிரச்சாரம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.