சென்னை : கோவையில் 38வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சிக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான, வேட்பாளர்கள் அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள ஷர்மிளா சந்திரசேகர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சாலையோர வியபாரிகள், பெண்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரிடமும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 38வது வார்டுக்குட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் நேற்றிரவு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
அப்போது, இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டிய அவர், பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுப்பேன் என உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்களுடன் அங்குள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.