கோயம்புத்தூர் வடவள்ளி அருகே கார் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் வேடப்பட்டியை சேர்ந்தவர் ஜெகன்ராஜ் (33). கார் ஓட்டுநர். இவர் தனது செல்போனை அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ் (32) என்பவரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் பணத்தை கொடுத்துவிட்டு செல்போனை வாங்கச் சென்ற போது, மதன்ராஜ் போனை கொடுக்காமல், ஜெகன்ராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரும் வடவள்ளி டாஸ்மாக் பின்புறம் உள்ள மயானத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறில் மதன்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட்டுநர் ஜெகன்ராஜை குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவானார்.
வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரவு முழுவதும் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, தடயங்களை வைத்து, கொலை செய்த மதன்ராஜை அதிகாலையில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.