கோவை : கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த 3 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பெண் உட்பட 4 பேர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்தகுமார், ரகு, மற்றும் அகமது இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக துடியலூர் பகுதியில் உள்ள பாஜக ஆட்டோ ஸ்டேன்டில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். ஆனந்தகுமார் திமுக ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக ஆனந்தகுமார் உட்பட மூவரையும், அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டவிடாமல், ரகளை செய்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால், மீண்டும் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்ட விடாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மீண்டும், ஆனந்தகுமார், ரகு, அகமது ஆகியோர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அப்போது திடீரென ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை எடுத்து ஆனந்தகுமார், ரகு, அகமது மற்றும் ஆனந்தகுமாரின் தாய் லட்சுமி ஆகியோர் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 4 பேர் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை பத்திரமாக மீட்டு பிறகு கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்களின் உறவினர்கள் கூறும் போது : துடியலூர் பாஜக ஆட்டோ ஸ்டேன்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், ஆனந்தகுமார் உள்ளிட்டோரை பாஜகவில் சேர சொல்லி நிர்பந்தம் செய்வதாகவும், மதம் மற்றும் வகுப்பு பாகுபாடு பார்த்து ஆட்டோ ஓட்ட விடாமல் மிரட்டல் விடுவதாக தெரிவித்தனர். மேலும், கடந்த சில மாதங்களாக சரியாக ஆட்டோ ஓட்ட முடியாததால் வாடகை, குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்த முடியாதல் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக, தெரிவிக்கின்றனர்.
போலீசா் பாதுகாப்பு கடுமையாக இருந்த போதும் திடீரென 3 ஆட்டோ ஒட்டுநர்கள் உட்பட 4 பேர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.