கோவை : கோவையில் ஆட்டோ டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் செங்குளம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் இறந்துகிடந்தார். அவரது உடலை மீட்டு குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இறந்து கிடந்தது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாசு என்பதும் அவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் வாசுவை கொலை செய்தது யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது டவுன்ஹால் பகுதியில் சுற்றித் பிரிந்த முகமது ரியாசை மடக்கி பிடித்தனர்.
குடிபோதையில் இருவரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்ட போது முகமது ரியாஸ் வாசுவை கல்லால் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.