கோவையில் மோசமான நிலையில் உள்ள சாலையில் சரியாக மூடப்படாத பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்த வாகன ஓட்டிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. குறிப்பாக, பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வதாகவும், உடனடியாக அதனை சரி செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பலமுறை நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் அப்பகுதியில் சென்ற கார் ஓட்டுநர் குழியை பார்த்து காரின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது, காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், நிலை தடுமாறி காரின் பின்புறம் இடித்து கீழே விழுந்தனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டனர். இந்த விபத்தில், இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் சாலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.