Categories: தமிழகம்

ஆன்லைன் கார் வாடகைக்கு விற்பனை.. கேரளாவில் தொடங்கி கோவையில் முடிந்த விசாரணை… குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது… !

அடமானம் வைக்கும் கார்களை சதி திட்டத்திற்கு பயன்படுத்தும் பயங்கரவாத கும்பலை போலீசார் விரைந்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவையில் சமீபகாலமாக வாகனங்களை வங்கி மூலம் மாதத் தவனை திட்டத்தில் வாங்கும் நபர்கள். அவர்களின் அவசரத் தேவைக்காக அந்த வாகனங்களை மற்றொரு நபர்களுக்கு அடமானம் வைக்கின்றனர். அந்த வாகனங்களை அடமானம் வாங்கும் நபர்கள், அதனை சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், காவல் துறையினர் குழப்பம் அடைந்து உள்ளனர். சமீபத்தில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அவர் பயன்படுத்திய கார் குறித்த விபரங்களை காவல்துறை மிகுந்த சிரமத்திற்கு பின்பு கண்டு பிடித்தனர். இதுபோன்று வாகனங்களை அடமானம் எடுக்கும் நபர்களை அவர்கள் கொடுக்கும் தொகையை விட கூடுதல் தொகையை (ராக்கெட் வட்டி) அடமானம் வைத்தவர்களிடம் கேட்கின்றனர்.

இதனால், அவசரத்த வைக்காத அடமானம் வைக்கும் நபர்கள் அதனை அப்படியே அவர்களிடம் விட்டு விடுகின்றனர். இதனால் அடமானம் வாங்கியவர்கள் அந்த வாகனங்களை தமிழகம் மட்டுமல்லாது, வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று குண்டுவெடிப்பு, கொலை – கொள்ளை, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

வாகன எண்ணை வைத்து காவல் துறையினர் தேடும்போது குற்றவாளிகள் பிடிப்பது தாமதம் ஆகிறது. இதனால் பல்வேறு வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமலும் போய் விடுகின்றன.

தற்பொழுது உள்ள கோவை மாநகர காவல் ஆணையர் துரிதமாக கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்பது கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் ஆன்லைன் மூலம் கார்களை வாடைக்கு கொடுக்கும் சில நிறுவனங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்த ஒரு கும்பல், பின்னர் அந்தக் கார்களை திரும்பி ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் திருவனந்தபுரம் வஞ்சியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் திருச்சூர் அருகே உள்ள வாடாபள்ளி பகுதியைச் சேர்ந்த இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், கோவை குனியமுத்து பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து, வஞ்சியூர் போலீசார், கோவை வந்து முகமது ரபிக்கை கைது செய்தனர். விசாரணையில் இவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்றும் தெரிய வந்தது.

இவர்களை இதே போல் கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் கார்களை வாடகைக்கு எடுத்து உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன் கோட்டயத்திலும் இதே போல் கார்களை வாடகைக்கு எடுத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார். விசாரணைக்கு பின் போலீசார் முகமது ரபீக்கை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

1 hour ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

5 hours ago

This website uses cookies.