சென்னை ; கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக, கைதான ஏழு பேர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த ஆண்டு அக்., 23ம் தேதி கார்குண்டு வெடிப்பு நடந்தது. இதில், அதே பகுதியை சேர்ந்த ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். போலீஸ் விசாரணையில், இவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், கார் குண்டு வெடிப்பை நடத்திய ஜமேஷா முபீனுக்கு கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன் (23), பெரோஸ் இஸ்மாயில் (27), உமர் பாரூக் (39) உள்ளிட்ட 11 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
இவர்களை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்து உள்ளனர். இவர்களில் ஏழு பேர் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மற்றவர்கள் மீது விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த மனு, நீதிபதி இளவழகன் முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் உள்ள ஐந்து பேரை நாலாவது முறையாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு பூந்தமல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். அதன் மீது இன்று விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அவர்களின் போலீஸ் காவலில் விசாரணை முடிந்து பிறகு மீண்டும் இறுதியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.