கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இரும்பு நடை பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தாததால் உயர்மட்ட இரும்பு நடை பாலத்தை அரசு பள்ளி அருகே மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோவை – பாலக்காடு சாலை குனியமுத்தூர் ரைஸ் மில் சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக கடந்த 2016ஆம் ஆண்டு மாநகராட்சி சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பில் இரும்பினால் ஆன உயர்மட்ட நடைபாலம் கட்டப்பட்டது. ஆனால், இந்த பாலம் பொதுமக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. பாலத்தில் ஏறுவதை தவிர்த்து சாலையில் செண்டர் மீடியாவின் இடைவெளி வழியாக மக்கள் இருபுறமும் சென்று வந்தனர்.
பொதுமக்கள் பயன்படுத்த உகந்ததாக இரும்பு நடைபாலம் இல்லை. இதனால், விளம்பர பதாகைகள் வைப்பதற்கும் மது போதை ஆசாமிகள் படுத்து உறங்குவதற்கு மட்டுமே பயன்படுகிறது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “குனியமுத்தூரில் இரும்பு நடை பாலத்தை அகற்றி 250 மீட்டர் தூரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ மாணவிகள் மிகுந்த பயன் அடைவார்கள் பாலத்தை இடமாற்றம் செய்ய ரூபாய் 35.60 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பாலத்தை இடமாற்றம் செய்யும் பணி விரைவில் தொடங்கும்,” என்றனர்.
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
குடும்பஸ்தன் திரைப்படம் – ஓடிடி & வசூல் சாதனை! மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான குடும்பஸ்தன் திரைப்படம் திரையரங்குகளில் பெரிய…
திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என…
This website uses cookies.