Categories: தமிழகம்

பேருந்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி… ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட போக்குவரத்து ஊழியர்கள்!!

கோவை : கோவையில் காவல் நிலையத்தை தொமுச போக்குவரத்துக்கழக அமைப்பினர் உள்பட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை சித்ராவிலிருந்து வெள்ளலூர் நோக்கி செல்லும் S19 TN 38 N 3179 என்ற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டி வருபவர் அஸ்வந்த்குமார். இவர் நேற்று வழக்கம் போல பணி செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, கோவை டவுன்ஹால் ராயல் தியேட்டர் சிக்னலில் நிறுத்தியுள்ளார். அதன் பின்பே சிக்னல் விடப்பட்டதும், பேருந்தை வழக்கம்போல இயக்கியுள்ளார்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் திடீரென சறுக்கி பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் விழுந்துள்ளனர். இதனால், பேருந்தின் பம்பர் இழுத்துக் கொண்டு சென்றுள்ளது. இதில், இந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த புஷ்பராணி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அந்த வாகனத்தை ஓட்டிவந்த மோகன் ராஜ் என்பவர் பலத்த காயத்துடன் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இது சம்மந்தமாக கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவு மேற்கு காவல் நிலைய போலீசார் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த வசந்த் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மோகன்ராஜ் என்பதும், அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அதில் பின்னால் அமர்ந்து பயணம் செய்த பெண் புஷ்பராணி அவர் பேரூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், வேலை நிமித்தமாக வந்து விட்டு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்பட அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு மேற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தொழில் அமைப்பினர் தங்களிடம் சிசிடிவி காட்சிகள் உள்ளது. பிறகு எதன் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் அந்த சிசிடிவி காட்சிகளை காண்பித்து அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தான் தவறுதலாக சறுக்கி பேருந்து முன் சக்கரத்தின் மீது விழுந்துள்ளனர். இதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நாளை (இன்று) காலை சம்பவ இடத்தில் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து கழக தொழில் அமைப்பினர் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

42 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

3 hours ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

3 hours ago

This website uses cookies.