கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க எஸ்பி பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள குடோனில் சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் குடோனில், தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, குடோனில் இருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுதாகரன்(43), குருநாதன் எத்திராஜ் (50), செல்வகுமார் (47), சிவகுமார் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து, பிடிபட்ட குட்கா பொருட்கள் மற்றும் கைதான நபர்களை, சூலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.