காரால் அடித்து தூக்கியதில் கால்கள் உடைந்த பெண்… சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பு ; தப்பியோடிய வடமாநில தொழிலதிபர்!
வடகோவை சிந்தாமணி பகுதியில் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன் இவரது மனைவி லீலாவதி. இவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை லீலாவதி வழக்கம்போல் வேலைக்காக தனது வீட்டில் இருந்து பூ மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
கென்னடி திரையரங்கு அருகே நடந்து சென்ற போது பின்னால் அதி வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி, பின்னர் லீலாவதி மீது மோதியது. இதில் லீலாவதி சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தை ஏற்படுத்தியவர் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்குமார் என்பதும் அதிவேகமாக வந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மேட்டுப்பாளையம் சாலையில் அதி வேகமாக வரும் கார் இருசக்கர வாகனம் மற்றும் லீலாவதி மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட லீலாவதிக்கு வலது கால் முறிவு ஏற்பட்டதுடன், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவி இழந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கார் விபத்தை ஏற்படுத்திய வட மாநில தொழில் அதிபரான உத்தம் குமார் என்பவர் ஆர். எஸ்.புரத்தில் வசிப்பதாகவும், அவரது ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி 2 ஆண்டுகளானதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய போது, விபத்தால் பாதிக்கப்பட்ட லீலாவதிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை செய்து தருவதாக கூறி கெஞ்சியுள்ளார். ஆனால், போலீசார் தரப்பில் உத்தம் குமாருக்கு ராஜ மரியாதை கொடுப்பதாகவும், அவரது சிகிச்சைக்கு உதவுவதாக கூறிய தொழில் அதிபர் உத்தம் குமாரும் , போலீசார் ஆதரவு இருப்பதால்,ஏமாற்றி விட்டதாகவும் தற்போது சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.