Categories: தமிழகம்

மீண்டும் பரபரப்பை கிளப்பிய கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு : 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் முகாம்!!

கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடி விபத்துக்குள்ளானது. இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தன.

கார் குண்டு வெடிப்புக்கு உள்ளானதில் ஜமீசா முபின் என்ற வாலிபர் பலியானார். ஜமேசா முபீனின் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்திய பொழுது முகமது தல்கா , முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

சம்பவம் நடந்த நான்கு நாட்களில் இந்த வழக்கு சென்னை என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன. வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் தமிழ்நாடு போலீசாரிடமிருந்து பெறப்பட்ட கோப்புகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த என் ஐ ஏ அதிகாரிகள் ஜமீஷா முபீனின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருக்கின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை சென்னை நெல்லை கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர்.

கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம் குனியமுத்தூர் ஆத்துப்பாலம் கரும்புக்கடை ஜி எம் நகர் வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவைக்கும் மேற்பட்ட வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

முன்னதாக கிடைக்கப் பெற்ற தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நடந்து வரும் இந்த ரெயிடில் அடுத்த கட்டமாக யார் கைதாக போகின்றனர் ? என்ன கைப்பற்ற போகின்றது ? என்பது பின்னர் தெரியவரும்.

சிறிய கால இடைவெளியில் மீண்டும் தேசிய முகமை அதிகாரிகளின் இந்த ரெய்டு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

39 minutes ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

2 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

4 hours ago

குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…

5 hours ago

இன்ஸ்டாகிராமில் நிர்வாண வீடியோ… முதல்முறையாக மகிழ்ச்சியை பகிர்ந்த நடிகர் ஸ்ரீ!

வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…

6 hours ago

மைனர் சிறுமியுடன் கல்லூரி மாணவன் திருமணம்.. சினிமா பாணியில் சிறுமியை கடத்திய கும்பல்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…

6 hours ago

This website uses cookies.