கோவை கார்குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில், பதிவிட்ட கிஷோர் கே சாமியிடம் சைபர் கிரைம் போலீஸார் ஆறு மணி நேரம் விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமி என்பவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சென்னையில் கைது செய்தனர். இதனையடுத்து கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.
இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 153 இன் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, அவரிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் , கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்திலுள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைவாசம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.