கோவை ; நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற பெண் நேற்று முன்தினம் காலை ஜிவி ரெசிடென்சி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் கௌசல்யாவின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். ஆனால், கௌசல்யா செயினை இறுக்க பிடித்துக் கொண்டதால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கீழே விழுந்தார்.
அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சிங்காநல்லூர் காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் மற்றும் அபிஷேக் என்ற இருவரை பிடித்து காரையும் பறிமுதல் செய்தனர்.
இதனைஅடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உடல் பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, அவர்களை கைது செய்யும் போது போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்து ஓடிச் சென்றுள்ளனர். அப்போது, கால் இடறி விழுந்து இருவரின் கைகளும் உடைந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டு விட்டுள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.