கோவை ; கோவை மாநகராட்சி நிர்வாகம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து இத்தொழிலை நசுக்கி வருவதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் (TACT) கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், தடாகம் சாலை டி.வி.எஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த இரு குறுந்தொழில் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து முடக்கி உள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து பேசிய TACT கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ், அந்நிறுவனங்களுக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள நபர் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென நோட்டீஸுடன் வந்து அந்நிறுவனங்களை காலி செய்து விட்டதாகவும், அங்குள்ள இயந்திரங்களை எல்லாம் வெளியேற்றி சீல் வைத்து விட்டதாக தெரிவித்தார்.
இதனால் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலை பறிபோய் தவித்து வருவதாகவும், இதனை நடத்தி வந்த தொழில் முனைவோர்களும் செய்வதறியாது தவித்து வருவதாக கூறினார். மேலும், கடந்த 20,30 ஆண்டுகளாக, அங்கு அந்நிறுவனங்கள் செயல்பட்டு வரும் போது, யாரோ ஒருவர் அளித்த புகாரின் பேரில், எவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் இதனை மேற்கொள்ளலாம் என கேள்வி எழுப்பினார்.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியமே அங்கு ஆய்வு செய்து அனுமதி அளித்த நிலையிலும், மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலானது குறுந்தொழிலை நசுக்கும் விதமாக உள்ளதாகவும், இதனால் பெரும் மன உலைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
எனவே தமிழக அரசு தொழில் துறை அமைச்சர்கள் நிர்வாகிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இத்தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் எனவும், கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.