கோவை ; கோவை மாநகராட்சி நிர்வாகம் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து இத்தொழிலை நசுக்கி வருவதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தினர் (TACT) கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், தடாகம் சாலை டி.வி.எஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்த இரு குறுந்தொழில் கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து முடக்கி உள்ளதாகவும், மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து பேசிய TACT கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ், அந்நிறுவனங்களுக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள நபர் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி, திடீரென நோட்டீஸுடன் வந்து அந்நிறுவனங்களை காலி செய்து விட்டதாகவும், அங்குள்ள இயந்திரங்களை எல்லாம் வெளியேற்றி சீல் வைத்து விட்டதாக தெரிவித்தார்.
இதனால் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வேலை பறிபோய் தவித்து வருவதாகவும், இதனை நடத்தி வந்த தொழில் முனைவோர்களும் செய்வதறியாது தவித்து வருவதாக கூறினார். மேலும், கடந்த 20,30 ஆண்டுகளாக, அங்கு அந்நிறுவனங்கள் செயல்பட்டு வரும் போது, யாரோ ஒருவர் அளித்த புகாரின் பேரில், எவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் இதனை மேற்கொள்ளலாம் என கேள்வி எழுப்பினார்.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியமே அங்கு ஆய்வு செய்து அனுமதி அளித்த நிலையிலும், மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலானது குறுந்தொழிலை நசுக்கும் விதமாக உள்ளதாகவும், இதனால் பெரும் மன உலைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
எனவே தமிழக அரசு தொழில் துறை அமைச்சர்கள் நிர்வாகிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, இத்தொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் எனவும், கோவை மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.