“வணக்கங்க COIMBATORE ” செல்பி பாண்ட் என்பதற்கு பதிலாக “வணக்கமுங்க” என வைத்திருக்கலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் ட்விட்டுக்கு பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் பல்வேறு குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் செய்யப்பட்டு அழகுப்படுத்த வருகின்றன. கோவை உக்கடம் பெரிய குளத்தில் வைக்கப்பட்டுள்ள I LOVE KOVAI பொதுமக்களின் முக்கிய செல்பி பாயிண்ட் ஆக உள்ளது.
இந்நிலையில் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர் செய்யப்பட்டு வருகிறது.
விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. மேலும் இங்கு “வணக்கங்க COIMBATORE” என்ற செல்பி பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அவரது ட்விட்டர் பக்கத்தில் “New Selfie Point in Coimbatore” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ட்விட்க்கு பொதுமக்கள் பலரும் “வணக்கங்க COIMBATORE” என்பதற்கு பதிலாக கொங்கு தமிழிலில் பேசும் போது குறிப்பிடப்படுவது போல் “வணக்கமுங்க COIMBATORE ” என வைத்திருக்கலாம் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.