கோவை ; கோவையில் 2 பேர் ஒரே அறையில் அமரும் விதமாக கழிவறை கட்டப்பட்டுள்ள சம்பவத்தால் கோவை மாநகராட்சி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 70வது வார்டான ராஜீவ் காந்தி நகரில், மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒரு பொதுக்கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் விதமாக, இந்த கழிப்பறையானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவறையின் ஒரு பகுதியில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறைக்குள் 2 கழிவறைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிவறைக்கு இடையிலே கதவுகளோ அல்லது தடுப்புகளோ கட்டப்படாமல் உள்ளது.
அதாவது, 2 பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் விதமாகவும், அதுவும் கதவுகளும் இல்லாதது போன்று இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. குறுக்கே சுவரும், கதவும் இல்லாமல் கட்டுப்பட்டுள்ள இந்தக் கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து, உடனே அதனை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
இதனிடையே, “இந்த கழிவறை தற்போது பயன்பாட்டில் இல்லை. விரைவில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது,” என்று கோவை மாநகராட்சி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.