கோவை ; முடிதிருத்த நிலையம், அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் போன்றவை அனுமதியின்றி இயங்கக் கூடாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சியில் முடிதிருத்த நிலையம், அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர், நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தம் / முடிசவரம் திருத்தம் தொழில் செய்யும் நிலையங்கள் மாநகராட்சியின் அனுமதியின்றி 01.02.2023 முதல் உரிமம் இன்றி நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரிம விண்ணப்ப கடிதத்தில் காவல் துறையினரின் தடையின்மைச் சான்றும் மற்றும் மாநகராட்சி மாநகர நல அலுவலர் அவர்களின் தடையின்மைச் சான்றும் பெறப்பட வேண்டும். மேற்காண்ட சான்றிதழ்கள் இல்லாவிடில் விண்ணப்பிக்க இயலாது அறிவிக்கப்படுகிறது.
மேற்காணும் நிறுவனங்கள் தங்களுக்கு உரிய நிறுவனத்திற்கான உரிமத் தொகையானது சாதாரண முடித்திருத்தும் நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.200/-ம் மற்றும் அதே நிறுவனங்கள் குளிர்சாதன வசதிகள் பொருத்தப்பட்டிருக்குமாயின் ரூ.1,000/-ம் மற்றும் அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் பார்லர் மற்றும் நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தம் போன்ற நிறுவனங்கள் 500 சதுரடி வரை என்றால் ரூ.5,000/-ம், 501 முதல் 1000 சதுரடி வரை ரூ.10,000/-ம், 1000 சதுரடிக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.15,000/-ம் வருடாந்திர உரிமத் தொகை கட்டணமாக மாநகராட்சியில் செலுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட விபரங்கள் கோயம்புத்தூர் மாவட்ட சிறப்பு அரசிதழ் எண்.10 மே 23/2023-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.