கோவை மாவட்டம் சூலூரில் எரிவாயு மயானத்தில் இறந்தவரின் உடல் மீது ஏறி அமர்ந்து அகோரிகளின் மந்திர பூஜைக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுமார் 40 வயது உடைய ஆண் பிணம் ஒன்று எரிவாயு மயானத்தில் அடக்கம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பெயரில் இரவு 7 மணி அளவில் சடலம் சூலூர் எரிவாயு மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. சடலத்துடன் இறந்தவரின் உறவினர்களுடன் 8 அகோரிகள் எனப்படும் சாமியார்கள் உடன் வந்து உள்ளனர்.
அவர்கள் சடலத்தை வேனில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லும் போது பிரம்மாண்டமான உடுக்கை வாத்தியங்களுடன் மந்திரங்கள் ஓதியபடி எடுத்துச் சென்றனர். மேலும், இறந்தவரின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்னதாக வந்து இருந்த அகோரிகளில் ஒருவர் இறந்தவரின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து சுமார் ஐந்து நிமிடம் மந்திரங்களை ஓதினார்.
பின்னர் அகோரியின் உடம்பில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து இறந்தவரின் வாயில் வைத்து மந்திரம் ஓதினார். அதன் பின்னர் இறந்தவரின் உடல் எரிவாயு மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ சூலூர் பகுதியில் வைரலானது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.