கோவை : கோவையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், குடியிருப்பு பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், கோவை கனியூர் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற ஒன்றரை வயது பெண் புள்ளி மான் மீது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில், நிகழ்விடத்திலேயே மான் உயிரிழந்தது. இதுகுறித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனவிலங்குகள் இருக்கும் சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்று விதிகள் இருந்து வரும் நிலையில், அதனை மீறும் இதுபோன்ற வாகன ஓட்டிகளால், வனவிலங்குகள் தொடர்ந்து உயிரிழப்பது வாடிக்கையாகி வருவதாக வனஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.