கோவை : கோவையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மயில், மான், காட்டுப் பன்றி உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. இந்த விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீா் கிடைக்காததால், குடியிருப்பு பகுதிகளுக்கும், விளைநிலங்களுக்கும் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், கோவை கனியூர் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற ஒன்றரை வயது பெண் புள்ளி மான் மீது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில், நிகழ்விடத்திலேயே மான் உயிரிழந்தது. இதுகுறித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனவிலங்குகள் இருக்கும் சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்று விதிகள் இருந்து வரும் நிலையில், அதனை மீறும் இதுபோன்ற வாகன ஓட்டிகளால், வனவிலங்குகள் தொடர்ந்து உயிரிழப்பது வாடிக்கையாகி வருவதாக வனஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
This website uses cookies.