கோவை : செல்வபுரம் தனியார் பள்ளி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ்ரகள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநகர போலீசார் தீவிரமாக கண்காணித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், செல்வபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் தனியார் பள்ளி அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கிவைத்து விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஸ் (29), உக்கடத்தை சேர்ந்த சரீப் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 190 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.