கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இளைஞர் ஒருவர் மது போதையில் காரில் ஏறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை சாய்பாபா காலனி நட்சத்திர விடுதி வளாகத்தில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் காரின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது போதையில் அட்டகாசம் செய்துள்ளார். இதனை அருகில் இருந்த நண்பர்கள் இளைஞரை கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் மது போதையில் இருந்த அவர் காரில் இருந்து இறங்கமாட்டேன் என சத்தம் எழுப்பி வந்துள்ளார். பின்னர் வந்த தனியார் விடுதியின் பாதுகாவலர்கள் இளைஞரை காரில் இருந்து இறங்கும்படி தெரிவித்து சில மணி நேரங்களுக்கு பின்பு காரில் இருந்து இறக்கினர்.
இந்த நிலையில் விடுதியில் இருந்த சிலர் இளைஞரின் அட்டகாசம் செய்யும் வீடியோவை செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.